Home Uncategorized ஜகாத் விளக்கமும், கொடுக்க தகுதி வாய்ந்த பொருட்களும்
Uncategorized - பொது - April 24, 2011

ஜகாத் விளக்கமும், கொடுக்க தகுதி வாய்ந்த பொருட்களும்

'இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்குத் தந்ததிலிருந்து செலவளியுங்கள்'-(குர்ஆன் 2:54)

' எந்த செல்வத்திற்கு உங்களைத் தன்னுடைய பிரதிநிதியாக (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்கினானே அந்தச் செல்வத்திலிருந்து செலவளியுங்கள்' (குர்ஆன் 57:7)

இஸ்லாத்தின் நான்காவது கடiமாயன 'ஜக்காத்' வறியவர்களும் வாழ வேண்டும் என்பதற்காக வல்ல இறைவனால் வகுக்கப்பட்ட வளமையான பொருளாதாரத் திட்டம் ஆகும். 'ஜகாத்' எனும் அரபிச் சொல்லுக்குத் 'தூய்மை படுத்துதல்' என்று பொருள். செல்வந்தர்கள் சேமிக்கும் நிதியிலிருந்து, இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குகாக வெளளியேற்றப்பட்டாக வேண்டும். இந்த விகிதப்படி செல்வந்தர்கள், ஏழைகளின் உரிமையைத் தம்முடைய உடைமையிலிருந்து வெளியேற்றத் தவறினால் செல்வர்கள் தம்வசம் வைத்திருக்கும் எஞ்சிய 97.5 சதவீதம் நிதியும் தூய்மையை இழந்துவிடுகிறது. இவ்வாறு தூய்மையை இழக்காமல் செல்வந்தர்களின் நிதி முழுவதும் தூய்மையுடன் இருக்க, ஏழைகளுக்கு வழங்கப்படும் இரண்டை சதவீதம் கட்டாயத் த ருமம் துணை செய்வதால் இந்தக் கட்டாயத் தருமத்திற்கு 'ஜகாத்'(தூய்மை படுத்துதல்) என்று வைக்கப்பட்ட பெயர் பொருத்தமாக அமைகிறது.

ஜகாத்தாய் வழங்கிட தகுதிபெறும் பொருட்கள்

1. தங்கம், வெள்ளி அல்லது இவ்விரண்டின் இடத்தை நிரப்பும் 'கரன்சி' நோட்டு போன்ற நாணயங்கள்.

2. வியாபாரப் பொருட்கள்.

3. தானியங்கள் மற்றும் பழவகைகள்.

4. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்.

 

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…