Uncategorized
ஸூபி மன்ஜில்
பிரதி வாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு காதிரிய்யா திக்ருமஜ்லிஸ் நடைபெறும். ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் செய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி – சுபுஹுக்குப்பின் கத்முல் குர் ஆன் ஓதி தமாம் செய்தல். ஷவ்வால் பிறை 10 மாலை காயல்பட்டினம் ஸூபி ஹழரத், ஹைதராபாத் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களின் கந்தூரி – காலை குர்ஆன் ஷரீபு ஓதி…
Read More »முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளி – கடற்கரை பள்ளி
காயல்பட்டணம் கடற்கரை சிங்கித்துறையில் வாழும் முஸ்லிம்களுக்காக அங்கு வாழும் முஸ்லிம்களால் சுமார் 1992 ம் வருடவாக்கில் மௌலானா மௌலவி அஷஷய்கு S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1995 ம் வருடம் பள்ளி திறக்கப்பட்டது. இங்கு ரபியுல் அவ்வல் மாதம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு மீலாது விழா எடுக்கப்படுகிறது. …
Read More »ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளி
1955ம் ஆண்டு ஜும்ஆ பத்வா வெளிவந்தது.நகரின் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸி கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில் இப் பள்ளி அமைந்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களில் தாய்மொழியில் குத்பா பிரசங்கம் செய்யப்படாததல் இருந்த காலகட்டத்தில், முதன்முதலாக இந்தப்பள்ளி நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்தே மிம்பரில் நின்று தமிழிலேயே குத்பா பிரசங்கம் செய்யப்பட்டு வருகிறது. ஹிஜ்ரி 1378 ரபியுல் அவ்வல் பிறை 12 (26-09-1958) வெள்ளிக்கிழமை மௌலவி மு.க. செய்யிது இபுறாகிம் ஆலிம் அவர்கள்…
Read More »K.M.T.பள்ளிவாசல்
கே.எம்.டி. மருத்துவமனைக்கு வருகை தரும் நபர்கள் தொழுவதற்கு வசதியாக மருத்துவமனை வளாகத்தில் இப் பள்ளி கட்டப்பட்டுள்ளது.
Read More »ஹஜ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு பள்ளி
காயல்பட்டணம் நெய்னார் தெருவில் கிழக்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியாகும். இப் பள்ளியின் முகப்பில் பெண் வலியுல்லாஹ் ஒருவரது கபுறு ஷரீஃபு உள்ளது. அக் காலத்திய காழி ஒருவரின் மகளுடைய கபுறு ஷரீஃப் என்று சொல்லப்படுகிறது. ஹிஜ்ரி 1430 , மார்ச் 1, 2009 ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா அழைப்பிதழ்! நாள்: ஹிஜ்ரி 1430 ரபீயுல் அவ்வல் பிறை 3…
Read More »மஸ்ஜிதுர் ரஹ்மான்
2006ம் வருடம் கட்டப்பட்ட பள்ளி இது. புதிதாக விரிவாக்கப்பட்ட ஊர் பகுதியான ஹாஜி அக்பர்சா நகரில் இப் பள்ளி உள்ளது.
Read More »கற்புடையார் பள்ளி
கீழ நெய்னார் தெருவில் அமைந்துள்ள பள்ளி இது. மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்று. இப்பள்ளிக்கருகே குளம் ஒன்றுள்ளது. முஹம்மது அபுபக்கர் வலி ரவியல்லாஹு அன்ஹு அவர்கள் இங்கு அடங்கியுள்ளார்கள். இவர்களுக்கு வருடாவருடம் கந்தூரி விழா எடுக்கப்படுகிறது.
Read More »மொட்டையார் பள்ளி (கோமான் பள்ளி)
கோமான் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. கி.பி. 875 லேயே இப் பள்ளி கட்டபட்டு விட்டது. ஜமாஅத் கட்டுப்பாடான இங்கு கோமான் மேலத் தெரு, கோமான் நடுத் தெரு, கோமான் கீழத் தெருக்கள் உள்ளன. 1. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரில் சுபுஹான மௌலிது ஓதுதல். 2. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை…
Read More »இரட்டைக்குளத்துபள்ளி (மஸ்ஜிது மீகாயில்)
காயல்பட்டணம் நெய்னார் தெரு சதுக்கைத் தெருக்களுக்கிடையே இப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளியின் மேற்கிலும் கிழக்கிலும் குளங்கள் இருந்ததால் இது இரட்டை குளம் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. மகான் செய்கு சதக்கத்துல்லாஹில் காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப் பள்ளியில் தங்கி மார்க்கம் போதித்து வந்தார்கள். இச் சமயத்தில் வானவர் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் உரையாடி மழை பொழிய வைத்ததினால் இப் பள்ளி மீகாயீல் பள்ளி என்று…
Read More »ஆறாம் பள்ளி
தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் காயல்பட்டணம் பிரதான வீதியில் இப் பள்ளி அமைந்துள்ளது. நகரின் பூர்வீகமான பள்ளிகளில் இதுவும் ஒன்று. இப்பள்ளியின் பெயரால் ஆறாம்பள்ளி தெரு என்ற தெரு உள்ளது. 1. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் நாகூர் நாயகம் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஷரிஃபு ஓதுதல். 2. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான…
Read More »