மெகா அமைப்பின் இரத்த தான முகாம்கள்!
60 பக்க மின்புத்தகம் (eBook) வெளியீடு!
அன்புடையீர்,
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) – கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், காயல்பட்டினத்தில் – அரசு இரத்த வங்கிகளுடன் இணைந்து – இரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது.
இதுவரை நடத்தப்பட்டுள்ள 43 முகாம்கள் மூலமாக – 2114 பேர் இரத்த தானம் செய்துள்ளார்கள். இதில் – 1840 பேர் ஆண்கள்; 274 பேர் பெண்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
8 ஆண்டுகள் நிறைவுற்று – 9 வது ஆண்டாக தொடரும் மெகா அமைப்பின் இப்பணிகளை – ஆவணப்படுத்தும் முகமாக, 60 பக்கம் கொண்ட மின்புத்தகம் (eBook) – BLOOD DONATION CAMPS IN KAYALPATTINAM – OVERVIEW OF AN IMPORTANT PUBLIC SERVICE – FROM APRIL 2017 TILL DATE (JULY 19, 2025) என்ற தலைப்பில் – கடந்த ஆகஸ்ட் 15 அன்று நடந்த மெகா அமைப்பின் சுத்தந்திர தின நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
அமைப்பின் துணை செயலாளர் – ஏ.எஸ்.புஹாரி இப்புத்தகத்தை வெளியிட – சமூக ஆர்வலர் PAK சுலைமான் – முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இந்த மின்புத்தகம் – இறைவன் நாடினால் – ஒவ்வொரு முகாம் நிறைவிலும் புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும்.
இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் – –
— முகாம்களின் சாராம்சம்
— ஆண்டு வாரியான முகாம்கள் தகவல்
— முகாம்கள் வாரியான தகவல்
— இரத்த பிரிவுகள் வாரியாக இரத்த தானம் செய்தோர் எண்ணிக்கை
— இரத்த பிரிவுகள் வாரியாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸஅப் குழுமத்தில் இணைவது குறித்த விபரம் (QR Codes)
— அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் (FAQs)
— ஊடங்களில் மெகா இரத்த தானம் முகாம்கள் குறித்து வெளியான செய்திகள்
— முகாம்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு
இவண்,
நிர்வாகிகள், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டுஅமைப்பு (MEGA). [அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…