Home Uncategorized தொழுகையின் ஒழுக்கங்கள்
Uncategorized - பொது - February 19, 2011

தொழுகையின் ஒழுக்கங்கள்

தொழுகைக்கு இறையச்சம் இன்றியமையாததாகும். இறையச்சமற்ற தொழுகை குறையுடைய தொழுகையாகும். எனவே தொழுகையை மிகவும் அச்சஉணர்வுடன் நிறைவேற்றவேண்டும். நாம் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் தொழவேண்டும். தொழுகை இறைவனுடன் உரையாடுவது போன்றதாகும். எனவே தொழுகையில் தொழுகையல்லாத மற்றவற்றை சிந்திப்பது, பேசுவது, ஏதேனும் சாப்பிடுவது, மேலே, வலது, இடது புறங்களிலே திரும்புவது, ஸலாத்திற்கு பதில் சொல்வது மேலும் இதுபோன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் பள்ளிவாயிலில் கூட்டாகத் தொழ வேண்டும். தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்வதும் தவறாகும். பள்ளிவாசலில் வலது காலை வைத்து நுழையவேண்டும். அங்கிருந்து இடது காலை முன்வைத்து வெளியேறவேண்டும். வெங்காயம், பூண்டு போன்றவற்றின் துர்நாற்றத்துடன் பள்ளிக்குள் வரக்கூடாது.

Check Also

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…