ஹாஜியப்பா தைக்கா பள்ளி
மொகுதூம் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மருமகனார் மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா அவர்களால் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஹாஜி அப்பா தைக்கா தெருவில் இறை தியானம் செய்வதற்கு தைக்கா ஒன்று உருவாக்கப்பட்டது. தைக்காவை உருவாக்கிய மகான் மறைந்த பின் காலப்போக்கில் இது பள்ளியாக மாற்றப்பட்டது. மகான் ஷெய்கு முஹம்மது ஹாஜி அப்பா அவர்களின் அடக்கஸ்தலம் இப் பள்ளியிலேயே அமைந்துள்ளது. மகான் அவர்களுக்கு வருடாவருடம் கந்தூரி நடந்து வந்தது. இம் மகான் அவர்களின் பெயராலேயே இது ஹாஜி அப்பா தைக்கா தெரு என அழைக்கப்படுகிறது.
2008 ம் வருடம் இப் பள்ளி புதுப்பித்து கட்டப்பட்டது.
2008 ம் வருடம் இப் பள்ளி புதுப்பித்து கட்டப்பட்டது.

நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!
அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…