தொழுக மக்ரூஹான நேரங்கள்:
1.பஜ்ரின் பர்ளுத் தொழுகையை தொழுதபின் பொழுது உதயமாகும் வரையிலும்
2. பொழுது உதயமாகி ஓர் ஈட்டியின் அளவுக்கு அடிவானில் அது உயரும் வரையிலும்
3. வானில் சூரியன் உச்சியில் இருக்கும்போதும்.
4. அஸரின் ஃபர்ளுத் தொழுகையை முடித்தபின் பொழுதடையும் வரையிலும்.
5. பொழுதடையும்போதும்.
இந்த நேரங்களில் நஃபில் முத்லக், தஸ்பீஹ் தொழுகை, மற்றும் இஹ்ராமிற்குரிய நஃபில் தொழுகை ஆகிய மூன்று தொழுகைகளை மட்டும் தொழுவது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.வெள்ளிக் கிழமை உச்சிப் பொழுதில் நஃபில் முத்லக், தஸ்பீஹ் தொழுகை ஆகியவற்றை தொழுவது கூடும்.
இம்மூன்றையும் தவிரவுள்ள ஃபர்ளான அதா, களா தொழுகை, ஜனாஸாத் தொழுகை, பள்ளிவாசல் காணிக்கைத் தொழுகை, கிரகணத் தொழுகை, உளுவின் சுன்னத்தான தொழுகை போன்றவற்றை இந்த நேரங்களில் தொழுதால் கூடும்.
கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber Internet சேவை துவங்கியதை அடுத்து, தற்போது நிறுவனம் த…